சாலையோர மரத்தில் இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழப்பு

சாலையோர மரத்தில் இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழப்பு

Update: 2024-04-16 14:00 GMT

பைல் படம் : சாலையோர மரத்தில் இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழப்பு

நாமக்கல்,

ரோட்டோரம் இருந்த மரத்தில் டூ வீலர் மோதிய விபத்தில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் 2 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்றொரு மாணவர் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பேளூர் செக்காரப்பட்டி அண்ணா நகரைச் சேர்ந்தவர் தரணிதரன் (18). இவர் நாமக்கல் அருகே உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.இ. படித்து வருகிறார். இவரும் அதே கல்லூரியில் 2ம் ஆண்டு பி.இ. படிக்கும், சேலம் கரூப்பூரைச் சேர்ந்த சதீஷ் (18) மற்றும் குள்ளப்பனூரைச் சேர்ந்த கோகுல் ஆகிய 3 பேரும் நேற்று கல்லூரி மதிய உணவு இடைவேளையின்போது ஒரே மோட்டார் சைக்கிளில் சேலத்தில் இருந்து திருச்செங்கோட்டுக்கு சென்றனர்.

பின்னர், திருச்செங்கோட்டில் இருந்து கல்லூரிக்கு திரும்பியுள்ளனர். மோட்டார் சைக்கிளை மாணவர் கோகுல் ஓட்டி சென்றுள்ளார். திருச்செங்கோடு செம்மாம்பாளையம் அருகே வந்தபோது இடதுபுறம் சென்ற வாகனத்தில் மோதாமல் இருக்க கோகுல் மோட்டார் சைக்கிளை திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், ரோட்டோரம் இருந்த மரத்தில் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கோகுல் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த தரணிதரன் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News