சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய குமாரபாளையம் புதிய தாலுகா அலுவலகம்

Kumarapalayam new taluka office tent of social enemies

Update: 2022-06-29 14:00 GMT

குமாரபாளையம் புதிய தாலுகா அலுவலகம்

சமூக விரோதிகளின் கூடாரமாக  புதிய தாலுகா அலுவலகம் மாறியுள்ளதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே பயணியர் மாளிகையில் புதிய தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் 75 சதவீதம் முடிவுற்ற நிலையில் உள்புற கட்டுமான பணிகள் நிலுவையில் உள்ளன. பல மாதங்களாக இதே நிலை நீடிப்பதால், இது கால்நடைகள் மேய்ச்சல் பகுதியாக மாறியதுடன், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. இதன் கட்டுமான பணியை விரைவில் பூர்த்தி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags:    

Similar News