முதியோர்களுக்கு உதவி வழங்கிய குமாரபாளையம் அபெக்ஸ் சங்கத்தினர்
குமாரபாளையத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு அபெக்ஸ் சங்கத்தார் சார்பில் உதவிகள் வழங்கப்பட்டன.
முதியோர் தினம் மற்றும் காந்தி பிறந்தநாளையொட்டி குமாரபாளையம் அபெக்ஸ் சங்கத்தார் சார்பில் முன்னாள் குளோபல் சேர்மன் ஈஸ்வர் மற்றும் அவரது துணைவியார் தலைமையில் எதிர்மேடு அன்னை ஆதரவற்றோர் மையத்தில் உள்ள முதியோர்களுக்கு2 சிப்பம் அரிசி, இனிப்புகள், பிஸ்கட், பழங்கள் வழங்கப்பட்டன. இதில் சங்க தலைவர் பிரகாஷ், முன்னாள் தலைவர் மனோகர், விவேக் உள்பட பலர் பங்கேற்றனர். மையத்தின் நிர்வாகி ஹேமமாலினி மற்றும் முதியோர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.