எவ்வளவு லஞ்சம் கொடுத்தாலும் போதாதா-வைரலாகும் வீடியோ

Update: 2021-04-22 10:45 GMT

எவ்வளவு லஞ்ச காசு கொடுத்தாலும் போதாதா? என நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் பிரசவமான பெண்ணை அலட்சியமாக நடத்திய ஊழியரிடம் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பகுதியை சேர்ந்தவர் முருகவள்ளி. இந்த பெண்ணை பிரசவத்திற்காக அவருடைய தந்தை கடந்த 19 ஆம் தேதி நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அதனை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் பிரசவமான முருகவள்ளியை கைவண்டியில் அமர வைத்து அழைத்து சென்ற மருத்துவமனை ஊழியர் உமா என்பவர் கீழே தள்ளிவிட்டு அலட்சியமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும், பிரசவித்த பெண் படுக்கை வசதி இல்லாமலும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மருத்துவமனை ஊழியரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபடும் காட்சிகள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. எவ்வளவு லஞ்ச காசு கொடுத்தாலும் போதாதா? அரசு மருத்துவமனைக்கு எதற்கு வருகிறோம்? என்று ஆதங்கத்துடன் பெண்மணி கதறும் காட்சிகளை பார்த்துள்ள சமூக ஆர்வலர்கள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News