வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா: மின்னொளியில் ஜொலிக்கும் பேராலயம்

வரும் 29ம் தேதி வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா தொடங்குவதை முன்னிட்டு மின்னொளியில் ஜொலிக்கும் பேராலயம்.

Update: 2021-08-27 02:41 GMT

வேளாங்கண்ணி பேரலாயத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்கு அலங்காரம்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள  உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 7ம்தேதி தேர்பவனியும் 8ம் தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும்

இந்தாண்டு கொரனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை என பேராலய நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில் எளிமையான முறையில் இந்த ஆண்டு பெருவிழா நடைபெற உள்ளது,

இதனை முன்னிட்டு பேராலயம் முழுவதும் வண்ணமிகு அலங்கார மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கொடிமரமும் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது வேளாங்கண்ணி பேராலயம்.

Tags:    

Similar News