நாகையில் வேலையில்லா ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்

நாகையில் வேலையில்லா ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-02-28 03:53 GMT

வேலையில்லா ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது.

அரசு மற்றும் தனியார் பள்ளி வேலையில்லாத ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நாகப்பட்டினத்தில் நடைபெற்றது. நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, புதுச்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வேலையில்லா ஆசிரியர் சங்கத்தினர் மாநில பொது குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது வயது மூப்பு அடிப்படையில் அரசு பணி, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணி வழங்கிட வேண்டும்,தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வரைமுறை படுத்தப்பட்ட சம்பளத்தை வழங்கிட அரசு ஆணைகள் தெரிவித்திட வேண்டும்,

கொரோனா காலத்தில் வழங்கப்படாத சம்பளத்தை உடனே வழங்கிட உத்தரவிட வேண்டும்,பணி பாதுக்காப்பு வழங்கிட வேண்டும்,தனியார் பள்ளி ஆசிரியர்களும் அரசு விதிமுறையில் அடங்கும் ஆசிரியர் என்பதால் அரசு ஆசிரியர்களுக்கு நிகரான அத்தனை சலுகையும் தனியார் பள்ளி ஆசிரியர் களுக்கும் வழங்கிட வேண்டும்,தனியார் பள்ளி ஆசிரியர்களின் பணி அனுபவத்தை முதன்மையாக கொண்டு அரசு ஆசிரியர் பணி வழங்கிட அரசு முன்னுரிமை தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றினர்.

Tags:    

Similar News