சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் வைகாசி மாத கார்த்திகையையொட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது

பிரசித்தி பெற்ற சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் வைகாசி மாத கார்த்திகையை முன்னிட்டு முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை பக்தர்கள் இன்றி நடைபெற்றது

Update: 2021-06-08 11:18 GMT

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் வைகாசி கார்த்திகையையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டம் பிரசித்தி பெற்ற சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் வைகாசி மாத கார்த்திகை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.


அப்போது கார்த்திகை மண்டபத்தில் வைக்கப்பட்ட சிங்காரவேலர், வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு சிவாச்சாரியார்கள் பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பழ சாறுகள், பழங்கள், பன்னீர் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தனர்.

அதைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவால் பக்தர்கள் இன்றி சிவாச்சாரியர்கள், ஆலய ஊழியர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

Tags:    

Similar News