18 பேரை கடித்து குதறிய வெறிநாய்-நாகையில் பரபரப்பு

Update: 2021-04-12 05:15 GMT

நாகப்பட்டினத்தில் 18 பேரை வெறி நாய் கடித்து குதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் நேற்றிரவு சுற்றித்திரிந்த ஒரு வெறிநாய் பேருந்திற்காக காத்திருந்த பொதுமக்களை திடீரென கடிக்க தொடங்கியது. பொதுமக்கள் சுதாரிப்பதற்குள் 10 க்கும் மேற்பட்டவர்களை கடித்து விட்டு நீதிமன்ற வளாகம், நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனை என நிற்காமல் ஓடிய அந்த வெறி நாய் அது செல்லும் வழியெல்லாம் நின்று கொண்டிருந்தவர்களையும் கடித்தது. இதில் 2 பெண்கள், ஒரு சிறுவன் முதியவர்கள் 2 பேர், நீதிமன்ற ஊழியர் என 18 பேரை கடித்து குதறிய அந்த வெறி நாய் பேருந்து நிலையத்தில் இருந்த கடைக்குள் நுழைந்தது.

இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் 18 பேரை கடித்து குதறிய அந்த வெறிநாயை லாவகமாக பிடித்து அடித்துக் கொன்றனர். இந்நிலையில் வெறி நாய் கடித்து 18 பேரும் சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த நாகை அதிமுக வேட்பாளரும் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவருமான தங்க.கதிரவன் நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பொதுமக்கள் அதிகம் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் வெறிநாய் 18 பேரை கடித்து குதறிய சம்பவம் நாகை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.

Tags:    

Similar News