மின் கட்டணம் பாக்கி காரணமாக சி.பி.சி.எல் நிறுவனத்தில் மின் இணைப்பு துண்டிப்பு
மின் கட்டணம் பாக்கி காரணமாக ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல் நிறுவனத்தின் மின் இணைப்பு துண்டிப்பு.
ஒருவருடமாக மின் கட்டணம் பாக்கி காரணமாக ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல் நிறுவனத்தின் மின் இணைப்பு துண்டிப்பு.
நாகை மாவட்டம் பனங்குடி கிராமத்தில் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதன் கிளை அலுவலகமாக நாகூர் பண்டகசாலை தெருவில் அமைந்துள்ள சிபிசிஎல் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆலையின் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால், சிபிசிஎல் நிறுவனம் கடந்த ஒரு வருடமாக மின் கட்டணம் செலுத்தாமல் இருந்து வந்துள்ளது.
அதனை தொடர்ந்து பலமுறை நாகை மாவட்ட மின்சார துறை அதிகாரிகள் அறிவிப்புகள் கொடுத்தும், அந்நிறுவனம் மின் கட்டணம் செலுத்தாமல் இருந்ததால், நாகூர் மின்துறை ஊழியர்கள் இன்று மின் இணைப்பை துண்டித்தனர். சிபிசிஎல் அலுவலகம் பூட்டி கிடந்ததால், மின் இணைப்பை துண்டித்து மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.