ஓ.பி.எஸ், இ.பி.எஸ். தேர்வு: நாகையில் இனிப்பு வழங்கிய அ.தி.மு.க.வினர்

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களாக ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தேர்வானதை அ.தி.மு.க.வினர் நாகையில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Update: 2021-12-07 05:52 GMT
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களாக ஓ.பி.எஸ், இ.பி.எஸ். தேர்வானதையொட்டி அ.தி.மு.க.வினர் நாகையில் இனிப்பு வழங்கினர்.

அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியின்று ஓ.பி.எஸ்,இ.பி.எஸ். தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளனர். இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக  அ.தி.மு.க.வினர் நாகை அவுரிதிடலில் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த மக்களுக்கும், பேருந்தில் பயணித்த பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கி வாழ்த்து கோஷம் முழங்கினர்.

Tags:    

Similar News