நாகையில் முப்படை தளபதி படத்திற்கு கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அஞ்சலி
நாகையில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் படத்திற்கு கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினார்கள்.
குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் முப்படை தளபதி உள்ளிட்டோர் மறைவிற்கு நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் திருவுருவ படம் வைக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து துறை அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் முப்படை தலைமை