நாகை அரசு மருத்துவமனைக்கு ரூ 50 ஆயிரத்தில் கொரோனா தடுப்பு உபகரணங்கள்
நாகை அரசு மருத்துவமனைக்கு ரூ 50 ஆயிரத்தில் இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்திய மருத்துவர் சங்கம் சார்பாக 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.
பல்ஸ் ஆக்சிஜன் கருவி, சர்க்கரை நோய் அளவிடும் குளுக்கோ மீட்டர் கருவி, ஆக்சிஜன் செறிவூட்டி, முக கவசம் உள்ளிட்ட பொருட்களை மருத்துவக்கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் வழங்கினார். நிகழ்வில் அச்சங்கத்தின் நிர்வாகிகளான மருத்துவர்கள் பலர் பங்கேற்றனர்.