நாகப்பட்டினம் கொரோனா தடுப்பு பணிகளை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகளை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-05-27 03:15 GMT

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் மருத்துவமனைகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் தமிழக சுற்றுசூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் , விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் என்ற ஆய்வு மேற்கொண்டார்.

நாகை மாவட்டம் திருமருகல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்துஆய்வு செய்தார் அதனைத்தொடர்ந்து திட்டச்சேரிபேரூராட்சியில் நடைபெற்ற தடுப்பூசி போடும் பணியை பார்வையிட்ட அமைச்சர் அங்கு உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் இருக்கை நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவரிடம் கேட்டு அறிந்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேவையான தடுப்பூசி கையிருப்பு உள்ளதாகவும் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி நடைபெற்று வருவதாகவும்,

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் தேவைக்கு ஏற்ப கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என்றார்.

மேலும் மாவட்டத்தில் வாய்ப்பு உள்ள இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என்றார். எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கொரோனா தடுப்பு பணியில் புறக்கணிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த ஆட்சியில் உள்ள நடைமுறைகள் மாற்றப்பட்டு எதிர்க் கட்சி மக்கள் பிரதிநிதிகள் அழைப்பு விடுக்கப்படுகிறது எனவும்,

பேரிடர் காலத்தில் அரசுடன் சேர்ந்து பயணிப்பது அவர்களின் கடமை எனவும், எங்களுடன் சேர்ந்து வந்தால் பயணிக்க தயார் என்று தெரிவித்த அவர், எதிர்க்கட்சிகள் பேரிடர் காலத்தில் மக்களுக்கு செய்யும் பணிகளை ஆளுங்கட்சி தடுக்கவில்லை என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

Tags:    

Similar News