உக்ரைன் போர் முடிவுக்கு வர நாகையில் கல்லூரி மாணவிகள் குத்து விளக்கு பூஜை
உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வரவேண்டி நாகையி் நடந்த குத்து விளக்கு பூஜையில் 1008 கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.
உலக மகளிர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாகை இ.எஸ்.பிள்ளை கல்லூரியில் 1008 திருவிளக்கு பூஜை இன்று நடைபெற்றது. உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வந்து உலக அமைதி பெற நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 1008 கல்லூரி மாணவிகள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். பிரமாண்ட அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த திருவிளக்கு பூஜையில், கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று மகளிர் தின வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.