நாகை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு

நாகையில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்றார்.

Update: 2022-01-20 04:43 GMT
நாகையில் நடந்த விழாவில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

நாகை மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா  நடைபெற்றது. தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நலத்துறை சார்பாக தாலிக்கு தங்கம், வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை சார்பாக உழவர்களுக்கு மானியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் சுமார் 3 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளூர் ஷாநவாஸ், நாகை மாலி மற்றும் பயனாளிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில்

டெல்டா மாவட்டங்களில் விரைந்து நெல் கொள்முதல் நிலையங்கள் தேவைக்கேற்ப திறக்கப்படும். கடந்த முறை சாகுபடி செய்த குறுவை நெல்மணிகள், முழுவதுமாக கொள்முதல் செய்யப்பட்டது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டு, நெல் மூட்டைகள் வீணாகி விடாமல் கொள்முதல் செய்யப்படும். குறுவைக்கு  நடைமுறையில் இருந்த முறை நெல் கொள்முதல் ஆன்லைனில் சிரமம் இல்லாமல் நடைபெறும். இ பதிவு செய்வதில் உள்ள சிரமங்கள் தவிர்க்கப்படும். இ பதிவில் ஏற்படும் சிக்கல்களை விவசாயிகள் புகாராக தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News