நாகையில் திமுகவினர் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு

குடிசை வீடுகளுக்கு சென்று முதியவர்கள் ஓடு அமர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன், தமிழக அரசின் 8 மாத கால சாதனைகளை எடுத்துரைத்தார்.

Update: 2022-02-11 00:30 GMT

திமுக வேட்பாளர் பிரதீப்க்கு ஆதரவாக தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

நாகை மாவட்டத்தில் திமுக மற்றும் அதிமுகவை சேர்ந்த வேட்பாளர்கள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். நாகை நகராட்சிக்கு உட்பட்ட 12 ஆவது வார்டு திமுக வேட்பாளர் பிரதீப்புக்கு ஆதரவாக தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன், நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பால்பண்ணைச்சேரி பகுதியில் வீடுவீடாக சென்று வாக்கு கேட்ட வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர். குடிசை வீடுகளுக்கு சென்று,  முதியவர்களுடன் அமர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன், தமிழக அரசின் 8 மாத கால சாதனைகளை எடுத்துரைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Tags:    

Similar News