நாகை மாவட்டத்தில் அமைதியான வாக்குப்பதிவு

Update: 2021-04-06 10:30 GMT

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கலெக்டர், முன்னாள் அமைச்சர், வேட்பாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

ஒருங்கிணைந்த நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், கீழ்வேளூர் வேதாரண்யம், சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் மதியம் 1 மணி நிலவரப்படி 44.2 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. நாகப்பட்டினம் காடம்பாடி நகராட்சி பள்ளியில் கலெக்டர் பிரவீன் நாயர், முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் ஆகியோர் வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தினர்.

நாகை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தங்க கதிரவன் மற்றும் அமமுக சார்பில் போட்டியிடும் மஞ்சுளா சந்திரமோகன் ஆகியோர் நாகை அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தனர்.வட்டத்தில் ஓரிரு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை தொடங்குவதில் சில நிமிட தாமதம் ஏற்பட்டதைத் தவிர மிகப் பெரிய பிரச்னைகள் ஏதும் இல்லாமல் அமைதியாகவே வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 

Tags:    

Similar News