நாகை கடற்கரை பகுதியை தூய்மைப்படுத்திய மாணவ -மாணவிகள்

சர்வதேச தூய்மை தினத்தையொட்டி நாகை கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர்.

Update: 2021-09-25 06:56 GMT
நாகை கடற்கரை தூய்மைப்படுத்தும் பணியை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தையொட்டி நாகப்பட்டினத்தில்  கடற்கரை பகுதி முழுவதும் தூய்மை படுத்தும் பணி நடைபெற்றது. நாகை புதிய கடற்கரையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் துவைக்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து மீன்வளப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நாகை கடற்கரை முழுவதிலும் கிடந்த பாலீதீன், குப்பை மற்றும் செடி, கொடிகளை அகற்றி அப்பகுதியை சுத்தப்படுத்தினர்.

Tags:    

Similar News