'நாகை- 30' விழாவில் மாணவர்களின் நகரும் ஓவிய உலக சாதனை நிகழ்ச்சி

‘நாகை- 30’ விழாவையொட்டி மாணவ -மாணவிகள் பங்கேற்ற நகரும் ஓவிய சாதனை நிகழ்ச்சியை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

Update: 2021-10-22 03:50 GMT
நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நகரும் ஓவிய உலக சாதனை நிகழ்ச்சியை தொடஙு்கி வைத்து பேசினார்.

நாகப்பட்டினம் மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டு 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, 'நாகை- 30' விழா கடந்த 18 ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நான்காம் நாளா நேற்று நாகையில் அமைந்துள்ள இ.ஜி.எஸ்.பிள்ளை தனியார் கல்லூரி சார்பில் பிரமாண்ட நகர்வு ஓவிய உலக சாதனை முயற்சி நிகழ்த்தும் நிகழ்வு  நடைபெற்றது.

மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து அரை கிலோமீட்டர் சுற்று பரப்பளவு கொண்ட மைதானத்தில் கல்லூரி மாணவ மாணவிகள் விழாவை கொண்டாடும் வகையில், நாகை 30 என நகரும் ஓவியமாக நகர்ந்து காட்டி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். நாகை 30 விழாவின் இறுதி நாளான இன்று பட்டிமன்றம், பரிசளிப்பு விழா, கலை நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவுபெற உள்ளது.

Tags:    

Similar News