மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: நாகை ஆதரவற்றோர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்

ஆதரவற்றோர் அன்பு இல்லத்தில் குழந்தைகளுக்கு புத்தாடை, இனிப்புகளை தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் வழங்கினார்.

Update: 2022-03-01 09:27 GMT

நாகையில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்றோர் அன்பு இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு புத்தாடை, இனிப்புகள் திமுகவினர் வழங்கினர்.

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் தலைமையில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கிய திமுகவினர்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நாகையில் திமுக சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நாகையில் அமைந்துள்ள ஆதரவற்றோர் அன்பு இல்லத்தில் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகளை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் வழங்கினார்.

அப்போது தமிழக முதல்வர் ஆரோக்கியத்துடன் வாழ தமிழ் பாடல்களை பாடி குழந்தைகள் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற திமுக கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News