நாகூர் பள்ளியில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா

நாகூர் பள்ளியில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நடைபெற்றது. இதில் கலெக்டர் கலந்து கொண்டனார்.

Update: 2021-12-19 03:15 GMT

நாகூரில் நடந்த சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் உலமாக்களுக்கு நலவாரிய அட்டைகளை கலெக்டர் அருண் தம்பு ராஜ் வழங்கினார். 

நாகை அடுத்துள்ள நாகூரில் உள்ள தனியார் பள்ளியில் சிறுபான்மை உரிமைகள் தின விழா இன்று கொண்டாடப்பட்டது. நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள், கருங்கன்னி, வேளாங்கண்ணி பேராலய பங்கு தந்தைகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விழாவில் 21 உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நலவாரிய அட்டைகளை வழங்கினார். அரசின் நலத்திட்டங்கள் சிறுபான்மை மக்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என விழாவில் பேசிய நாகை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Tags:    

Similar News