நாகையில் உள்ளூர் இளைஞர்களுடன் 2 மணி நேரம் பூப்பந்து விளையாடிய அமைச்சர்

நாகையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளூர் இளைஞர்களுடன் சேர்ந்த 2 மணி நேரம் பூப்பந்து விளையாடினார்.

Update: 2021-12-17 04:25 GMT

நாகையில் அமைச்சர் மெய்யநாதன் பூப்பந்து விளையாடினார்.

அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு தமிழக சுற்று சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று இரவு நாகை வந்தார். இந்த நிலையில் இன்று நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் பேட்மிட்டன் விளையாடினார். உள்ளூரை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்களோடு அமைச்சர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பேட்மிட்டன் விளையாடினார். தொடர்ந்து யோகா, உடற்பயிற்சி உள்ளிட்டவைகளில் ஈடுபட்ட அமைச்சர் 8 வருடங்களாக பேட் மிட்டன் விளையாடி வருவதாகவும்,  உடல் ஆரோக்கியத்துடன் இருக்க ஏதாவது ஒரு விளையாட்டை இளைஞர்கள் கட்டாயம் விளையாட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Tags:    

Similar News