போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
பெரியார், அண்ணா கண்ட கனவு நிறைவேற்றும் வகையில் பெண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறுவது மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வரும் போட்டித் தேர்வுகளுக்கான இணையவழி பயிற்சி முகாமை Qஆய்வு செய்தார். மேலும் இணையவழி மாணவர்களிடம் அவர் கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து மாவட்ட வேலைவாய்ப்பு பயிற்சி மையம் மூலம் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று பணி அமர்த்தப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
இதனையடுத்து நாகப்பட்டினம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது பயிற்சி மேற்கொண்டிருந்த மாணவிகளிடம் பேசுகையில் பெரியார், பேரறிஞர் அண்ணா கண்ட கனவு நிறைவேற்றும் வகையில் பெண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது எனவும் தொடர்ந்து தமிழக அரசு மூலம் அளிக்கப்படும் பயிற்சிகளைப் பெற்று வேலை வாய்ப்பை பெற வேண்டும் என அவர் வாழ்த்து தெரிவித்தார்.