நாகப்பட்டினத்தில் கஞ்சா விற்ற கணவன், மனைவி கைது : 8 கிலோ கஞ்சா பறிமுதல்

நாகப்பட்டினத்தில் கஞ்சா விற்பனை செய்த கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Update: 2021-06-25 01:42 GMT

நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் காவல் நிலையம். (பைல் படம்)

நாகப்பட்டினத்தை அடுத்த வெளிப்பாளையம் தெற்கு நல்லியான் தோட்டம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் தெற்கு நல்லியான் தோட்டத்தை சேர்ந்த வீரையன் ( 62), அவரது மனைவி சிந்தாமணி (55) ஆகிய இரண்டு பேரையும் கஞ்சா விற்பனை செய்த போது கையும் களவுமாக பிடித்தனர். 

மேலும் அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த  8 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவர் மீது வழக்கு பதிவு செய்து  வெளிப்பாளையம் போலீசார் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News