நடுக்கடலில் மாயமான 9 பேர் குடும்பத்துக்கு எம்எல்ஏ ஆறுதல்

நடுக்கடலில் படகு கவிழ்ந்து மாயமான நாகை மீனவர்கள் 9,பேரின் குடும்பத்தினரை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் ஆறுதல். விரைவில் மீட்கப்படுவார்கள் என நம்பிக்கை.தெரிவித்தார்.

Update: 2021-05-17 14:30 GMT

கேரள மாநிலம் கொச்சின் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற நாகை மீனவர்களின் விசைப்படகு நேற்று டவ்தே புயலில் சிக்கி கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மற்றும் சாமந்தான்பேட்டையை சேர்ந்த தந்தை மகன்கள் உள்ளிட்ட 9 மீனவர்கள் கடலில் மூழ்கி மாயமாகினர்.

இந்தச் சம்பவம் நாகை மாவட்ட மீனவ கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே பாதிக்கப்பட்ட நாகை சாமந்தான்பேட்டையைச் சேர்ந்த மீனவ குடும்பத்தினரை எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் இன்று சந்தித்தார்.

அப்போது மீனவர்கள் விரைவில் மீட்க படுவார்கள் என மீனவர்களின் உறவினரிடம் அவர் ஆறுதல் கூறினார். அதன் பின்னர் கூறிய எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் , அரபிக்கடலில் மாயமான தமிழக மீனவர்கள் லட்சத் தீவு பகுதியில் கரை சேர்ந்து இருப்பதாக வந்துள்ள செய்திகள் அடிப்படையில் விரைவில் நாகை மீனவர்கள் சொந்த ஊருக்கு அழைத்து வரப்படுவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags:    

Similar News