நாகை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

நாகை பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2021-10-23 06:09 GMT

நாகை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது.

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் நாகை மாவட்டத்தில் வெப்ப சலனம் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. நாகப்பட்டினம், நாகூர், வேளாங்கண்ணி, திட்டச்சேரி, திருமருகல், கீழ்வேளூர், கீழையூர், திருப்பூண்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில் கன மழை பெய்தது.

காலை நேரத்தில் பெய்த தொடர் மழை காரணமாக அலுவலகம் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் பாதிக்கப்பட்டனர். மழையின் காரணமாக சாலையில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது, இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மழையின் காரணமாக நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் சம்பா சாகுபடி செய்துவரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



 


Tags:    

Similar News