பொய் வாக்குறுதி: டிடிவி தினகரன் விமர்சனம்

நாகையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம்.

Update: 2021-03-21 04:28 GMT

அமமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று நாகையில் நடைபெற்றது. அவுரித்திடலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் நாகை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மஞ்சுளாசந்திரமோகனுக்கு குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பின்னர் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன், லஞ்ச லாவண்யம் இல்லாத ஆட்சியை உருவாக்கவும், வெளிப்படையான நிர்வாகத்தை மேற்கொள்ளவும் அமமுக விற்கு ஆதரவு தந்து வாக்களிக்க வேண்டும் என்றார். தேர்தலுக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொய் வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார். தேர்தலுக்காக 10 சதவீத இட ஒதுக்கீடு என்ற பெயரில் அனைத்து சமுதாய மக்களையும் தமிழக முதல்வர் ஏமாற்றி வருவதாக அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் விமர்சித்து பேசினார். முன்னதாக வாக்காளர்களை மகிழ்விக்க எம்ஜிஆர் ஜெயலலிதா வேடமணிந்த நடன கலைஞர்கள் குக்கர் சின்னத்தில் வாக்கு கேட்டு சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடினர்.

Tags:    

Similar News