இ.பி.எஸ்,ஓ.பி.எஸ்.முற்றுகை கண்டித்து நாகையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

ஜெயலலிதா நினைவு நாளில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்.சை முற்றுகையிட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-12-06 17:34 GMT

இ.பி.எஸ்.,ஓ.பி.எஸ்.சை முற்றுகையிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாகையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளில் அஞ்சலி செலுத்த வந்த அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோரை முற்றுகையிட்டு, அவர்களது கார் மீது அ.ம.மு.க. வினர் செருப்பு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து நாகையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவுரித்திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு இணை ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.எஸ். உள்ளிட்ட அ.தி.மு.க.வினருக்கு பாதுகாப்பு வழங்கத் தவறிய காவல்துறையை கண்டித்தும், செருப்பு வீசிய அ.ம.மு.க. வினரை கைது செய்ய வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News