நாகையில் காய்கறி வெட்டிக்கொடுத்து திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

நாகை நகராட்சி 20 ஆவது வார்டு திமுக வேட்பாளர் சுந்தரேஷ்வரி கணேசன் பெண்களோடு தரையில் அமர்ந்து அரிவாள் மனையில் காய்கறி வெட்டிக்கொடுத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Update: 2022-02-14 07:13 GMT

நாகை நகராட்சி 20 ஆவது வார்டு திமுக வேட்பாளர் சுந்தரேஷ்வரி கணேசன் காய்கறி வெட்டிகொடுத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நாகை நகராட்சியில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் தலைமையில் திமுகவினர் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது நாகை நகராட்சி 20 ஆவது வார்டு திமுக வேட்பாளர் சுந்தரேஷ்வரி கணேசன் பெண்களோடு தரையில் அமர்ந்து அரிவாள் மனையில் காய்கறி வெட்டிக்கொடுத்து உதய சூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags:    

Similar News