நாகையில் உயர் மின்னழுத்த  கம்பி அறுந்து விழுந்து தம்பதி பரிதாபமாக பலி

உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து கணவனும், மனைவியும் ஒருசேர உயிரிழந்த சம்பவம், அந்தனபேட்டை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-10-19 05:08 GMT

மின்சாரம் பாய்ந்து பலியான ராஜலட்சுமி, பழனிவேலு.

நாகை அடுத்துள்ள அந்தனபேட்டை சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் பழனிவேலு. இவரும், இவரது மனைவி ராஜலட்சுமியும் நாகை துறைமுகத்தில் கூலித் தொழிலாளர்கள். வழக்கம்போல் சமைப்பதற்காக, பாத்திரத்துடன் கொல்லைப்புறத்திற்கு ராஜலட்சுமி சென்றுள்ளார்.

அப்போது,  எதிர்பாராதவிதமாக அவரின் வீட்டு வழியாக சென்ற உயர் மின் அழுத்த கம்பி,  அறுந்து ராஜலட்சுமியின் மேல் விழுந்துள்ளது. மின்சாரம் தாக்கப்பட்டு, அவர் அலறினார். சத்தம் கேட்டு வீட்டில் இருந்து ஓடி வந்த பழனிவேலு, மனைவியை காப்பாற்ற முயன்று மின் கம்பியை கையால் தட்டியுள்ளார். அப்போது,  அவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இச்சம்பவத்தில் கணவனும், மனைவியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த நாகை போலீசார், இருவரின் உடல்களை மீட்டு, நாகை அரசு மருத்துவமனைக்கு உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகையில், மின்சார கம்பி அறுந்து விழுந்து கணவனும், மனைவியும் ஒருசேர உயிரிழந்த சம்பவம், அந்தனபேட்டை கிராமத்தை, பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

Similar News