நாகையில் பணப்பந்தலால் ஜொலித்த நாகை சத்ருசம்ஹார மூர்த்தி கோயில்

நாகையில் புத்தாண்டு தினத்தன்று பணப்பந்தலால் நாகை சத்ருசம்ஹார மூர்த்தி கோயில் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

Update: 2022-01-02 06:15 GMT

புத்தாண்டு தினத்தன்று நாகை ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தி கோயில் பணத்தாள்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

ஆங்கில புத்தாண்டு பண்டிகை பல்வேறு கோவில்களில் வெகு சிறப்பாக கொண்டாடபட்டது. அதன் ஒருப்பகுதியாக நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ஸ்ரீசத்ரு சம்ஹாரமூர்த்தி ஆலயத்தில்  ரூபாய் நோட்டுகளால் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆங்கில புத்தாண்டு வழிபாடு நடத்தப்பட்டது. கோயில் பிரகாரம் முழுவதும், புதிய ரூபாய் நோட்டுகளை தொங்கவிட்டபடியும், விநாயகர் மற்றும் முருகன் சன்னதிகள் பணப்பந்தலால் ஜொலித்தன.


மேலும், சிவ லிங்கத்திற்கு தங்க காசுகளால் அலங்காரம் செய்தும், பிரகாரம், கருவறை ஆகிய பகுதிகளில் 10, 20, 100,  200 நோட்டுகள் வரை பயன்படுத்தி பணப்பந்தல் அமைக்கப்பட்டும் ஐம்பொன் காசுகள் கொண்டும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்த காட்சி பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து, ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீசத்ரு சம்ஹாரமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.

Tags:    

Similar News