நாகை: இருசக்கர வாகனத்தை திருடும் சிசிடிவி காட்சி வைரல்

மர்ம நபர் ஒருவர் கனமழையை பயன்படுத்தி லாவகமாக இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி இருந்தது.

Update: 2021-10-12 05:00 GMT

இருசக்கர வாகனத்தை திருடும் சிசிடிவி காட்சி.

நாகூர் தைக்கால் தெருவை சேர்ந்த ஷாகுல் ஹமீது தனது இரு சக்கர வாகனத்தை மாலிமார் தெருவில் உள்ள டிஎன்டிஜே பள்ளி அருகே நிறுத்தி விட்டு சென்றுள்ளார். கனமழை பெய்ததால் நீண்டநேரம் பள்ளியின் உள்ளே காத்திருந்த சாகுல் அமீது மழை விட்டதும் வந்து பார்த்த போது அவரது இருசக்கர வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அருகில் இருந்த சிசிடிவி கேமராக்களை சோதனை செய்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் கனமழையை பயன்படுத்தி லாவகமாக இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து சாகுல் அமீது நாகூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.


Tags:    

Similar News