கொசுவலைக்குள் புகுந்தபடி வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்

நாகை நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் கொசுவலைக்குள் புகுந்தபடி வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.

Update: 2022-02-05 03:35 GMT

நாகை நகராட்சி வேட்பாளர் கொசுவலைக்குள் புகுந்தபடி வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.

வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் பல்வேறு வித்தியாசங்களை கையில் எடுத்து வேடிக்கைகளையும் வினோதங்களையும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில்  நாகை நகராட்சி 7-ஆவது வார்டில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை தலைவர் மக்சூத் சாஹிப், சுயேட்சையாக போட்டியிடுகிறார். நாகை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கொசு தொல்லை அதிகம் இருப்பதாகவும், தான் வெற்றிபெற்றால் கொசுவை ஒழிப்பேன் என்றும், தனது ஆதரவாளர்களுடன் கொசு வலைக்குள் புகுந்துகொண்டு நாகை நகராட்சி அலுவலகத்திற்கு  வருகை புரிந்தார். தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு சென்ற அவர், அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் கட்சி நிர்வாகி கொசுவலைக்குள் புகுந்துகொண்டு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த காட்சி நகராட்சி அலுவலகத்தில் நின்றிருந்த அனைவரது மத்தியிலும் பரபரப்பை  ஏற்படுத்தியது.

Tags:    

Similar News