பொறாமை உணர்வில் போராட்டம் நடத்தும் அதிமுக: ஜவாஹிருல்லா

பொறாமை கொண்டு விரக்தியை வெளிப்படுத்தவே அதிமுகவினர் வருகின்ற 28 ஆம் தேதி உரிமைக்குரல் போராட்டம் நடத்த உள்ளனர்.

Update: 2021-07-26 11:34 GMT

செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ.

நாகை மாவட்டம் நாகூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த சட்டமன்ற உறுப்பினரும், மனித நேய மக்கள் கட்சியின் தலைவருமான ஜவாஹிருல்லா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் நிதி நிலைமையை அதாள பாதாளத்திற்கு தள்ளியது அதிமுக அரசு. திமுக அரசு லாட்டரி விற்பனையை நடத்த உள்ளதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பொய் கூறி வருகிறார்.  பொறாமை கொண்டும், தங்களின் இயலாமையை காட்டுவதற்காக, விரக்தியை வெளிப்படுத்தவே வருகின்ற 28 ஆம் தேதி அதிமுகவினர் உரிமைக்குரல் போராட்டத்தை அறிவித்துள்ளனர். வக்புவாரிய சொத்துக்களை மீட்கும் நடவடிக்கைகளை வேகமாக எடுக்க வேண்டும், வக்பு வாரிய சொத்துகளின் வருமானத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிச்சயமாக திமுக அரசு இதனை நிறைவேற்றும் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.


Tags:    

Similar News