நாகையில் காந்தியின் 75 வது நினைவு நாள் அனுசரிப்பு: பல்வேறு அமைப்பினர் மரியாதை

நாகையில் காந்தியடிகளின் 75 வது நினைவு நாளையொட்டி கோட்சேவுக்கு எதிராகவும், ஆர்.எஸ்.எஸ்.  அமைப்பை கண்டித்தும் பகுத்தறிவு கழகத்தினர் கண்டன முழக்கம் எழுப்பினர்.

Update: 2022-01-30 08:08 GMT

காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பல்வேறு அமைப்பினர்.

மகாத்மா காந்தியடிகள் 75 வது நினைவு நாளில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை, இந்திய தேசிய காங்கிரஸ், பகுத்தறிவு கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்பட பல்வேறு அமைப்பினர் நாகை அபிராமி அம்மன் திருவாசலில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

அப்போது காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு எதிராகவும், பகுத்தறிவு கழகத்தினர் ஆர்.எஸ்.எஸ்.  அமைப்பை கண்டித்தும் கண்டன முழக்கம் எழுப்பட்டது.

விவாசய மாநில தலைவர் வி.சுப்ரமணியன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சுபாஷ் சந்திர போஸ் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கதிர்நிலவன், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் அமிர்தலிங்கம், பகுத்தறிவாளர் கழக தலைவர் மு.க.ஜீவா, திமுக தலைமை கழக பேச்சாளர் ராஜா உள்பட அரசியல் , சமுக அமைப்பச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

Tags:    

Similar News