நடத்துனரிடம் ரூ. 45 லட்சம்  சுருட்டிய கும்பலின் தலைவி கைது

Update: 2021-03-13 12:15 GMT

நாகப்பட்டினத்தில் வருமானவரித்துறை அதிகாரி போல நடித்து ஓய்வு பெற்ற நடத்துநரிடம் 45 லட்ச ரூபாய் சுருட்டிய கும்பலின் தலைவி தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

நாகப்பட்டினத்தை அடுத்துள்ள பால்பண்ணைச்சேரி பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற நடத்துநர் சுப்ரமணியன். இவரிடம் நாகை ஆண்டோ சிட்டி பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி மற்றும் அவரது குடும்பத்தினர் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இதனை பயன்படுத்தி ராஜேஸ்வரி மற்றும் அவரது உறவினர்கள் போலி வருமானவரித்துறை அதிகாரிகள் தோற்றத்தில் நடத்துநர் சுப்ரமணியனிடம் சுமார் 45 லட்ச ரூபாய் வரை ஏமாற்றி அபகரித்து தப்பி சென்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சுப்ரமணியன் நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் தான் ஏமாற்றப்பட்டது குறித்து புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட குற்றப்பிரிவு போலீசார் ராஜேஸ்வரி உள்ளிட்ட 9 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் ராஜேஸ்வரி தஞ்சாவூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அங்கு சென்ற தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர்.பின்னர் நாகை மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்த தனிப்படை போலீசார் நடத்துநர் சுப்ரமணியனிடம் 45 லட்ச ரூபாய் பணம் மற்றும் காரைக்காலில் பல்வேறு நபர்களை ஏமாற்றிய புகார்கள் குறித்து துருவி துருவி விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News