மாதிரி வாக்குப்பதிவு- ஆர்வத்துடன் வாக்களித்த பொதுமக்கள்

Update: 2021-03-06 04:30 GMT

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவு செயல் விளக்கத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர் .

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்டகலெக்டருமான பிரவீன் நாயர் உத்தரவின் பேரில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி நாகை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் மாதிரி வாக்கு பதிவு செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாகை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மாதிரி வாக்கு பதிவு செயல் விளக்க நிகழ்ச்சியில் எப்படி வாக்களிப்பது என்பது குறித்து பொதுமக்களுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குபதிவு செய்தனர். இதேபோல நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் மாதிரி செயல் விளக்க மாதிரி வாக்கு பதிவு நடைபெறுவதாக மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி தெரிவித்தார்.

Tags:    

Similar News