நாகை - சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

Update: 2021-02-04 10:30 GMT

நாகப்பட்டினத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழாவையொட்டி ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த இரு சக்கர வாகன பேரணியை மாவட்ட எஸ்பி., ஓம் பிரகாஷ் மீனா தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினத்தில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் 32-வது தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 18ம் தேதி முதல் இந்த மாதம் 17ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. பேரணியை நாகப்பட்டினம் மாவட்ட எஸ்.பி., ஓம்பிரகாஷ் மீனா தொடங்கி வைத்தார்.

பேரணியில் காவலர்கள், மகளிர் காவலர்கள், பொதுமக்கள் ஹெல்மெட் அணிந்து பங்கேற்றனர். நாகப்பட்டினம் அவுரி திடலில் தொடங்கிய பேரணி சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. சாலைகளில் செல்லும் போது இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் ,வாகன ஓட்டிகள் தங்களிடம் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Tags:    

Similar News