மதுரை அருகே வைகை ஆற்றில் நீரில் மூழ்கி இருவர் சாவு: 4 பேரை தேடும் பணி தீவிரம்

மதுரை கரடிக்கல் அருகேயுள்ள அனுப்பபட்டி கிராமத்தை சேர்ந்த வினோத் குமார், அன்பரசன் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர்

Update: 2022-08-09 16:15 GMT

வைகையாற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 4 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்டம், கரடிக்கல் அருகே வைகை ஆற்றில் சுழலில் சிக்கி 2 பேர்  உயிரிழந்தனர். மேலும் 4 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மதுரை கரடிக்கல் அருகேயுள்ள அனுப்பபட்டி கிராமத்தை சேர்ந்த வினோத் குமார், அன்பரசன் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர். ஆற்றில் இறங்கி குளித்த 6 பேர் சுழலில் சிக்கிய நிலையில் மீதமுள்ள நால்வரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் உயிரிழந்த வினோத்குமார் சி ஆர் பி .எப் வீரராவார். இவருக்கு 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. அவரது நண்பர் அன்பரசனும் உயிரிழந்துள்ளார். கூறப்படுகிறது. சுழலில் சிக்கிய அதே ஊரைச் சேர்ந்த 4 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மதுரை, திருமங்கலம், செக்கானூரணி போன்ற பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 4 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News