மதுரை மாவட்ட சிவ ஆலயங்களில் ஜனவரி.6- ல் திருவாதிரை ஆரூத்ரா தரிசனம்

மார்கழி மாதம் திருவாதிரை, பௌர்ணமி அன்று அதிகாலை ஆருத்ரா தரிசனம் திருவிழா விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது;

Update: 2022-12-30 16:00 GMT

பைல் படம்

மதுரை பகுதி கோயில்களில் ஜனவரி 6-ஆம் தேதி திருவாதிரை விழா நடைபெறவுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள, சிவன் ஆலயங்களில் ஜனவரி 6-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை திருவாதிரை விழா நடைபெறுகிறது. ஆண்டுதோறும், மார்கழி மாதம் திருவாதிரை, பௌர்ணமி அன்று அதிகாலை ஆருத்ரா தரிசனம் திருவிழா விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. சிவாலயங்களில் அன்றைய தினம் அதிகாலை 4 மணி அளவில் , நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசருக்கு பக்தர் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு, கோ பூஜை ஆகியவை சிறப்பாக நடைபெறும். அதைத் தொடர்ந்து, நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசருக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும் .

மதுரை மாவட்டத்தில், மதுரை மீனாட்சி அம்மன், செல்லூர் திருவாப்புடையார் திருக்கோவில், சிம்மக்கல் பழைய சொக்கநாதர், இம்மையில் நன்மை தருவார், தெப்பக்குளம் முத்தீஸ்வரர், திருவேடகம் ஏடகநாதர் சுவாமி ஆலயம், தென்கரை மூலநாதர் சுவாமி ஆலயம், சோழவந்தான் காமராஜர் பாலம் அருகே உள்ள, விசாக நட்சத்திர ஸ்தலமான பிரளயநாத சுவாமி ஆலயம், மதுரை அண்ணா நகர் சர்வேஸ் ஆலயம், சித்தி விநாயகர் ஆலயம், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம், அவனியாபுரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் ஆகிய கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.அதிகாலை வேளையில், சிறப்பு தீபாரதனையும் பக்தர்களுக்கு  பிரசாதம்  வழங்குதல் போன்ற நிகழ்ச்சி நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை ,கோவில் நிர்வாகிகளும், விழா குழுவினரும் இணைந்து செய்து வருகின்றனர்.

சோழவந்தான் பிரளயநாத சுவாமி ஆலயத்தில், ஜனவரி 6-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணி அளவில், நடராஜர் சிவகாமி, மாணிக்கவாசகர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும் .இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாக அதிகாரி இளமதி, தொழில் அதிபர் எம் .வி.எம் மணி, பள்ளித் தாளாளர் டாக்டர் எம். மருதுபாண்டியன், கணக்கர் சி. பூபதி ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News