திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் சைக்கிள்கள் வழங்கும் விழா
திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.;
திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் சைக்கிள் வழங்கினார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பிளஸ் 1 முடித்த 415 மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது . இவ்விழாவில், நகராட்சித் தலைவர் ரம்யா முத்துக்குமார் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார்.
விழாவில், நகராட்சி துணைத்தலைவர் ஆதவன் அதியமான், கவுன்சிலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.