திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் தேசிய இளைஞர் நாள் விழா

சுவாமி விவேகானந்தரின் 160 வது பிறந்தநாள் தேசிய இளைஞர் எழுச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது.

Update: 2023-01-13 07:30 GMT

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், வழிபாட்டு மண்டபத்தில் நடைபெற்ற  சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் விழா

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே  திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், வழிபாட்டு மண்டபத்தில் சுவாமி விவேகானந்தரின் 160வது பிறந்தநாள் தேசிய இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடப்பட்டது.

கல்லூரிச் செயலர் சுவாமி வேதானந்த, ஆசியுடன் நிகழ்ச்சியானது துவங்கியது. நிகழ்ச்சியில், கல்லூரியின் அகமதிப்பீட்டு நிர்ணய குழுவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர். ஏ.சதீஷ் பாபு வரவேற்ப்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் டி. வெங்கடேசன் தலைமை உரையில்  அச்சம் தவிர் என்ற வாக்கிற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் சுவாமி விவேகானந்தர் என்பதை எடுத்துரைத்தார்.

கல்லூரியின் குலபதி சுவாமி அத்யாத்மானந்த விவேகானந்தரின் பன்முகத்தன்மைகளை எடுத்துரைத்தார். இசைக்கலைஞர் இராஜபாளையம் உமாசங்கர் அவர்கள்  பணிவும் துணிவும் என்ற தலைப்பில் நகைச்சுவையும், சிந்தனையும் கலந்த முறையில் சிறப்புரை ஆற்றினார். தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ஜி.இராமர் நன்றி உரை ஆற்றினார். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கே. கார்த்திகேயன், முதன்மையர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் ஜி. சஞ்சீவி, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News