இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்கிறது: ஜே.பி. நட்டா
கடந்த 8 ஆண்டுகளாக இந்தியா அதிவேகமாக வளர்ந்து வருகிறது சரியான அரசு ஆட்சி செய்கிறது என ஜே.பி. நட்டா தெரிவித்தார்;
மதுரைக்கு வந்த பாஜக தேசியத்தலைவர் ஜெ.பி. நட்டா
கடந்த 8 ஆண்டுகளாக இந்தியா அதிவேகமாக வளர்ந்து வருகிறது,சரியான அரசு ஆட்சி செய்கிறது என, ஜே.பி. நட்டா தெரிவித்தார்.
மதுரையில் நடந்த பாஜக ஆலோசனை கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பேசுகையில், தொழிற்துறையில் முதலீடு செய்வதால் நாட்டின் வளர்ச்சி அதிகரித்துள்ளது, தமிழ்நாட்டிலும் அதன் வளர்ச்சியை காணமுடிகிறது. மேக்கிங் இந்தியா திட்டத்தில் 85% மக்கள் பலனடைத்துள்ளனர்.பல்வேறு வளர்ச்சிக்கு மற்றும் தொழிற்சாலை அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு 543 ஏக்கர் நிலத்தை மட்டுமே வழங்கி உள்ளது.
ரூ. 392 கோடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கும், மல்லிக்கு புவிசார் குறியீடு கொடுத்து மதுரையின் வளர்ச்சிக்கும்,கைவினை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிக்கும் மத்திய அரசு உதவி உள்ளது. பயண நேரத்தை குறைப்பதற்கு 4, 6 வழிச்சாலைகளை சாகர்மலா திட்டம் என கொண்டு வந்தது என்றார் அவர்