தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கர்நாடக மாநிலம் பெங்களூர் வரதபால்யா பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி(44). கூலித் தொழிலாளி. இவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன் உள்ளார். பெரியசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் குடும்பத்தில் மனைவியுடன் பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று பெரியசாமி காவேரிப்பட்டணம் அடுத்த பந்தேரியில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு வந்திருந்தார். அங்கு அவர் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.