கிருஷ்ணகிரி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் சிறப்பு தள்ளுபடி

கிருஷ்ணகிரி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனை 20ம் தேதி வரை நடைபெறுகிறது.

Update: 2023-08-03 04:00 GMT

பைல் படம்

கிருஷ்ணகிரி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் சிறப்பு தள்ளுபடி  20.08.2023 வரை நடைபெறும் என சேலம் மண்டல மேலாளர் காங்கேயவேலு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சேலம் மண்டல மேலாளர் காங்கேயவேலு வெளியிட்டுள்ள செய்தியில், கோ-ஆப்டெக்ஸ் கிருஷ்ணகிரி விற்பனை நிலையத்தில் 2 வாங்கினால் 1 இலவசம் சிறப்பு தள்ளுபடி விற்பனை கடந்த 24.07.2023 முதல் நடைபெற்று வருகிறது. இச்சிறப்பு விற்பனை வருகின்ற 20.08.2023 வரை நடைபெறும்.

தமிழகமெங்கும் உள்ள கைத்தறி நெசவாளர்களின் கை வண்ணத்தில் உருவான பட்டு சேலைகள், பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், பருத்தி சட்டைகள், துண்டுகள், திரைச்சீலைகள் போன்ற இரகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பட்டுச்சேலை முதல் துண்டு வரை அனைத்து இரகங்களையும் வாடிக்கையாளர்கள் வாங்கி பயன் பெறலாம். வாடிக்கையாளர்கள் இரண்டு எண்ணிக்கையிலான இரகங்கள் வாங்கும் போது ஒரு இரகத்தின் விலைக்கு (குறைவான விலை) ஈடான மதிப்புள்ள துணி இரகங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் வாடிக்கையாளர்கள் சேர்ந்து 11 மாதங்களுக்கான சந்தா தொகையினை செலுத்தினால் 12 வது மாத சந்தா தொகையினை கோ- ஆப்டெக்ஸ் செலுத்துகிறது. சேமிப்பு திட்டத்தின் 12 - வது மாத முடிவில் கூடுதல் பலனுடன் 30% தள்ளுபடியில் துணி இரகங்களை வாங்கி பயன் பெறலாம் என சேலம் மண்டல மேலாளர்  காங்கேயவேலு  தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News