5 வருட தலைமறைவு குற்றவாளி மும்பையில் கைது: காவல்துறைக்கு எஸ்.பி., பாராட்டு

5 வருடங்களாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை மும்பையில் கைது செய்த போச்சம்பள்ளி போலீசாருக்கு எஸ்.பி., பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

Update: 2021-09-11 05:30 GMT

எஸ்.பி.,யிடம் பாராட்டு சான்றிதழ் பெறும் போச்சம்பள்ளி போலீசார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி காவல் நிலைய பகுதியில் கொலை வழக்கில் ஐந்து வருடங்களாக தலைமறைவாக இருந்த நபரை போலீசார் மும்பையில் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.

இந்த சிறப்பான பணியை பாராட்டி காவல் ஆய்வாளர் ராஜேஷ், காவல் உதவி ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் முதல் நிலை காவலர் ராமகிருஷ்ணன், காவலர் அப்துல்சலாம் ஆகிய காவலர்களுக்கு எஸ்.பி., அலுவலகத்தில் இன்று மாவட்ட எஸ்.பி., சாய்சரன் தேஜஸ்வி சான்றிதழ்கள் வழங்கியும், தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

Tags:    

Similar News