அரசு மருத்துவமனையில் மின்தடை: வெண்டிலேட்டர் செயல்படாததால் கொரோனா நோயாளி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் மின்தடையால் வெண்டிலேட்டர் செயல்படாததால் கொரோனா நோயாளி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-06-26 05:30 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள ஒபிலிகாட்டூரை சேர்ந்தவர் பிரபு(30). விவசாயி. கொரோனா பாதிப்புடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் கடந்த 14ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று கொரோனா சிறப்பு வார்டின் கீழ் தளத்தில் மின்சாரம் தடைபட்டது. இதனால் வெண்டிலேட்டரின் பேட்டரி அளவு குறைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வெண்டிலேட்டர் அளவு குறைந்ததாக பிரபுவின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளனர். ஒரு கட்டத்தில் பிரபு மூச்சு விட சிரமப்பட்டார்.

இந்நிலையில் பிரபு தங்கி இருந்த அறையில், மின் இணைப்பு வராததால் அவரை வேறு இடத்திற்கு அழைத்து சென்றனர். ஆனாலும் அவர் இறந்து விட்டார். இதையடுத்து மருத்துவமனை அலட்சியத்தால் பிரபு இறந்ததாக அவரது உறவினர்கள் 4 பேர் மருத்துவமனையின் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை டவுன் போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் அசோகனிடம் கேட்டபோது, பிரபுவிற்கு பேட்டரி லெவல் குறையும் முன்னர் நாங்கள் வெண்டிலேட்டரை மாற்றிவிட்டோம். ஆனாலும் அவர் சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட்டார் என்றார். இதற்கிடையே கொரோனாவால் இறந்த வேறு ஒருவரின் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் இறந்து விட அவரது உறவினர்கள் அங்கிருந்த மேசை, நாற்காலிகளை உடைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News