பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், முகக்கவசங்களை பாஜக வழங்கியது

கிருஷ்ணகிரியில் நகர பாஜ சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், முகக்கசவங்கள் வழங்கப்பட்டது.

Update: 2021-04-29 03:00 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது பல்வேறு அமைப்புகள் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முககவசங்களை வழங்கி வருகின்றனர். கடந்த வாரம் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜ கட்சி தலைமை அலுவலகத்தில், கொரோனா சேவை இயக்கத்தை கிழக்கு மாவட்டத் தலைவர் தர்மலிங்கம் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் முருகேசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து நகர பாஜ சார்பில், கிருஷ்ணகிரி ரவுண்டானா ஐந்து ரோட்டில், நேற்று 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முககவசங்கள் வழங்கப்பட்டன. இதில், பாஜ நகர தலைவர் ரமேஷ், நகர துணைத்தலைவர் தாமோதரன், நகர செயலாளர் முருகேசன், நகர பொருளாளர் வெங்கடாஜலபதி மற்றும் கல்வி வளர்ச்சிப் பிரிவு நகரத் தலைவர் சங்கரய்யா, தமிழ் வளர்ச்சிப் பிரிவு நகரத்தலைவர் காசி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News