வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி வாகனங்கள் பராமரிப்பு ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் பராமரிப்பு மற்றும் இயக்கும் முறை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலக கூட்ட அரங்கில், அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் தனியார் பள்ளிகளின் தாளாளர்கள், முதல்வர்கள் மற்றும் பள்ளி வாகன பராமரிப்பு பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.
இந்த கூட்டத்திற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சாமி தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், அன்புசெழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளி வாகனங்கள் பராமரிப்பு மற்றும் வாகனங்களில் வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் உபகரணங்கள் தொடர்பாகவும், வாகனங்களை இயக்கும் முறை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் தனியார் பள்ளி தாளாளர்கள், முதல்வர்கள் மற்றும் வாகன பராமரிப்பு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.