தொழிற்சாலைகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்...

விதிமுறைகள் குறித்த கூட்டம்

Update: 2021-05-10 12:15 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழிற்சாலைகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

ஊரடங்கின் போது தனியார் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில், தொழிற்சாலை பிரநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி பேசும்போது  மாவட்டத்தில், கொரோனா ஊரடங்கின் போதும் தொழிற்சாலைகள், அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது சுழற்சி முறையில் பணிக்கு வந்து செல்ல ஏதுவாக பணியாளர்களுக்கு உரிய அடையாள அட்டை அந்தந்த நிறுவனங்கள் வழங்க வேண்டும்.

தொழில் நிறுவனங்கள் சிறப்பு அலுவலர் ஒருவரை நியமித்து, பணியாளர்களுக்கு கொரோனா உள்ளதா, அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். சிறப்பு அலுவலர்களின் விவரங்கள், மொபைல் எண் விவரத்தினை மாவட்ட தொழில் மைய பொது மேலாளருக்கு தெரிவிக்க வேண்டும்.

தொழிற்சாலை நுழைவு வாயில்களில், கை கழுவும் வசதி, கிருமி நாசினிகள் தெளித்தல், பணியாளர்கள் முககவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும். தொழிற்சாலை நிறுவனங்களின் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முகாம்கள் நடத்த வேண்டும் என அவர் தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன்,கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, தொழிற்சாலைகள் இணை இயக்குனர் சபீனா உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News